Fathima Naleera. Powered by Blogger.

Friday, January 4, 2013

மாயையில் பேதலிக்கும் மனிதம்! -பாத்திமா நளீரா


காலையில் – நீ
முஸ்லிமாக
வெளியே செல்கிறாய்
மாலையில்
முனாஃபிக்காக
வீட்டில் விழுகிறாய்.

++++++

உன்...
ஆன்மீக சிந்தனையை
புழுக்கள் கூட்டம்
புசித்து விட்டனவா?
மாயைகளின்
புகைக்குள் மிதக்கிறாயே..


கலாசாரத்தைத்
தாண்டிய
கால்களுக்கு
மண்ணறை வேதனையின்
“நாகரீக“த் தீர்ப்பு
எப்படியிருக்கும்
தெரியுமா?
++++++
போதைக்கும்
மாதுவுக்கும்
பொற்கிழி கொடுக்கிறாயா?
கவனம்...
மரண வேதனைக்கு
மருத்துவம் இல்லை
இறுதி வரை – உன்
ஆன்மாவின்
மன்றாட்டம்
மறுமை வரை
மிதிபட்டுக் கொண்டே
இருக்கும்...
++++++

அன்னிய மோகத்தில்
முகம் கழுவி
குர்ஆனை விட்டு
வெளியேற – எத்தனை
விருதுகள் – உனக்கு
விருந்து படைத்தன...

++++++


ஹராமுடன்
படுக்கை அமைத்து
இசையுடன் உறங்கி
நெருப்பைத் தின்று
சடலமாக வாழ
உனக்கு – என்ன
பட்டம் தேவை?

++++++


மரணம்
பின்னால் இருப்பதாக
நினைக்கிறாயா? அது
உன் முன்னால்தான்
சிரித்துச் சிரித்து
சீற்றமாகச் சீறுகிறது..

++++++


உன் இளமைக்கு
விருந்து கொடுக்கும்
படிதாண்டிய
எண்ணங்களை
பட்டியலிட்டுப் பார்
அடுத்த தலைமுறை கூட
தலைகுனிந்த
பரம்பரையாக
கண்ணீர் விடும்..

நன்றி விடி வெள்ளி 03-01-2013

1 comment:

  1. //ஹராமுடன்
    படுக்கை அமைத்து
    இசையுடன் உறங்கி
    நெருப்பைத் தின்று
    சடலமாக வாழ
    உனக்கு – என்ன
    ‘பட்டம்’ தேவை?// உண்மை....!

    ReplyDelete